கேரளாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பரோலில் வெளிவந்த 65 வயது மேற்பட்டவர்களுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்துள்ளது அம்மாநில அரசு. அதேபோல், மற்ற வழக்குகளில் கைதாகி பரோலில் சென்றுள்ளவர்கள், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வந்துவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கேரளாவில் 3 மத்திய சிறைகள் உட்பட 54 சிறைகளில் 6000க்கும் அதிகமான குற்றவாளிகள் இருந்தனர். திருவனந்தபுரம் மத்திய சிறையில் ஆகஸ்ட் மாதத்தில் பணியாளர்கள் உட்பட 480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே கேரள மனித உரிமை ஆணையம், குற்றவாளிகளுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்துதல் வசதிகளை உருவாக்கித் தரவேண்டும் என உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தது.
தொற்றுநோய்களின் போது சிறைகளில் கூட்டம் குறைப்பதற்காக, கேரள உயர்நீதிமன்றம் மார்ச் மாத இறுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறைதண்டனை அனுபவித்த கைதிகளுக்கு பரோல் வழங்கியது.
“2 ஆண்டுகளாக ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை” - பேரறிவாளன் வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி
அதன்படி, ஜெயிலில் கொரோனா பரவலைத் தடுக்க எண்ணிய கேரள அரசு, சமீபத்திய மாதங்களில் பல்வேறு பிரிவுகளின்கீழ் கைதான குற்றவாளிகளை பரோலில் அனுப்பியிருந்தது. எனினும், குழந்தைகள் மற்றும் கடத்தல் விஷயங்களில் ஈடுபட்டவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் தீவிரவாதங்கள் போன்ற முக்கிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பரோல் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!