ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஷேன் வாட்சன் தன்னுடைய ஓய்வை அறிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2018 ஐபிஎல் தொடரில் சாம்பியன், 2019 தொடரில் ரன்னர் அப் என தொடர்ந்து சாதனைப்படைத்து வந்த சிஎஸ்கே அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் மோசமாகவே அமைந்தது. இந்த ஐபிஎல் கொடரில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 12 புள்ளிகளுடன் 7 ஆம் இடத்தை பிடித்தது சிஎஸ்கே. 2018, 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய ஷேன் வாட்சன், இந்தாண்டு தொடரில் சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினார்.
இந்தாண்டு ஐபிஎல்லில் ஒரே ஆறுதல் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்று, இந்தத் தொடரை வெற்றியுடனே முடித்தது. இந்நிலையில் நேற்றைய கடைசி ஆட்டத்துக்கு பின்பு சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஷேன் வாட்சன் தான் ஓய்வுப்பெறுவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா" வெளியிட்டுள்ள செய்தியில்.
சிஎஸ்கேவின் ஓய்வு அறைக்கு சென்ற ஷேன் வாட்சன் "நான் ஓய்வுப்பெறுகிறேன். சிஎஸ்கே அணியில் இத்தனை ஆண்டுகாலம் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக 2018 இல் 555 ரன்களும், 2019 இல் 398 ரன்களும், 2020 இல் 299 ரன்களை எடுத்துள்ளார். இந்தாண்டு அவருடைய அதிகப்ட்ச ஸ்கோர் 83 என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?