தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது அதிமுக.
தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பரக் குழு என பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் களத்தில் முன்னணியில் இருக்கின்றன.
குறிப்பாக அதிமுக ஒருபடி மேலே சென்று, தங்களது கட்சியின் முதல்வர் வேட்பாளாராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘’சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று ஆட்சியில் பாஜக பங்குபெற வாய்ப்பு இருக்கிறது’’ என்றார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சிகளாக இருக்கும் அதிமுக – பாஜக கூட்டணி, வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில், ஒருவேளை வெற்றி பெறும் பட்சத்தில் பாஜகவுடன் அதிமுக ஆட்சியை பகிர்ந்து கொள்ளுமா என்கிற கேள்வி அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்த நிலையில், அதிமுக அதற்கு விளக்கமளித்துள்ளது.
அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைசெல்வன் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘’தமிழக மக்கள் எப்போதுமே தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள கட்சிக்குதான் வாக்களிப்பார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இதுவரை அமைந்ததும் இல்லை, இனி அமையப் போவதும் இல்லை.
அது காங்கிரசாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் சரி, தமிழகத்தில் எப்போதும் ஆட்சியமைத்தது ஒரே ஒரு கட்சிதான். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு எந்த முன்னுரிமையும் இல்லை.
2006 ஆம் ஆண்டில், திமுகவுக்கு 96 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கிடைத்தபோது, திமுகவே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. அதன் முக்கிய தோழமை கட்சியான காங்கிரஸுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை. கூட்டணி எப்போதுமே தேர்தல்களுக்காகவே இருந்துள்ளது. எதிர்காலத்திலும் தமிழகம் ஒரு கூட்டணி ஆட்சியைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை’’ என்றார்.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை