திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தனியார் நிறுவன ஹெலிகாப்டர் மூலம், சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் எதிர்வரும் திங்கள் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் மூலம் கொடைக்கானலை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியுடன், கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம், ஓய்வு பெற்ற விமான ஓட்டிகளை கொண்டு சுற்றுலா பயணிகள் மலைப்பகுதிகளின் அழகிய எழில் கொஞ்சும் காட்சிகளை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த சிறப்பு ஹெலிகாப்டரில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ. 6 ஆயிரமும், புதிதாக திருமணமான தேனிலவு ஜோடிகளுக்கு ரூ. 25 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் கொடைக்கானல் நகரில் உள்ள தனியார் மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் பறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் மலைப்பகுளை ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப்பார்க்கச் செல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்