ஹைதராபாத்தில் திருடிய நகையை அணிந்து போட்டோ எடுத்து, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்ததால் மாட்டிக்கொண்ட திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் ரச்சகொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாய்புரி காலனியில் உள்ள அங்கிடி ரவிகிரண், 2019ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு கோவிலுக்குச் சென்றிருக்கிறார். திரும்பிவந்து பார்த்தபோது வீடு திறந்த நிலையில் இருந்திருக்கிறது. அவர் வீட்டை பூட்ட மறந்துவிட்டதாக நினைத்திருக்கிறார். பிறகு, வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போய்விட்டதைக் கண்டுபிடித்த அவர், நகைகள் திருட்டுப்போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
அதன்பிறகு, சமீபத்தில் ரவிகிரணின் பக்கத்து வீட்டு பெண்மணி வாட்ஸ் அப்பில் தனது போட்டோ ஒன்றை ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். அந்தப் பெண், தன் வீட்டில் திருட்டுப்போன நகையைப் போன்றே ஒரு நகையை அணிந்திருப்பதை கவனித்த அவர், இதுகுறித்து போலீஸாரிடம் கூறியிருக்கிறார். அந்த பெண்ணிடம் பலகோணங்களில் விசாரணை நடத்தியபிறகு, அவர் மகன் பொன்னுகோட்டி ஜிஜேந்தர் நகையைத் திருடியது தெரியவந்திருக்கிறது.
’வேலை கிடைத்தால் உயிரை விடுவேன்’ - விபரீத நேர்த்திக்கடனால் பலியான வங்கி மேலாளர்.!
அவரைக் கைதுசெய்த போலீஸார், அதற்கு உதவியாக இருந்த அந்த பெண்மணிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!