கலை என்பது மக்களுக்கானது. அதனால், நடிப்பதோடு மட்டுமல்லாமல், தன்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் மக்கள் பிரச்சனைகளுக்காவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் துணிச்சலோடு குரல் கொடுப்பது மட்டுமல்ல; குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக களத்தில் இறங்கி போராடியும் ‘கெத்’தார்த் என்பதை நிரூபித்தவர் நடிகர் சித்தார்த். அதனாலேயே, திரைத்துறையினர் மட்டுமல்ல அரசியல் விமர்சகர்களும் இவரது ட்விட்டர் பக்கத்தை இந்தியா முழுக்க ஃபாலோவ் செய்கிறார்கள்.
எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திடீரென ட்விட்டரில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்திற்கு திரும்பி ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
Will have 4 releases in #Tamil next year. It's been a really tough year for the whole world. Hope we can all find our rhythm and forge ahead soon. Adhu varaikkum, udamba paathukkanga makkale. Koodiya seekiram sandhippom. Ungal Siddharth. ❤️ — Siddharth (@Actor_Siddharth) October 30, 2020
இன்று அவரின் ட்விட்டர் பக்கத்தில் “அடுத்த ஆண்டு தமிழில் எனது நான்கு படங்கள் வெளிவரவிருக்கின்றன. இந்த ஆண்டு முழு உலகிற்கும் கடுமையான ஆண்டு. நாம் அனைவரும் இதிலிருந்து விரைவில் மீள்வோம் என்று நம்புகிறேன். அதுவரைக்கும் உடம்பை பார்த்துக்கோங்க மக்களே. கூடிய சீக்கிரம் சந்திப்போம். உங்கள் சித்தார்த்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Loading More post
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்
’தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன்’ - கருணாஸ்
பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்பும் சசிகலா?
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!