பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும் தனது ரசிகர்களுக்கு தன் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை சமூக ஊடங்கள் மூலம் அப்டேட் செய்துவருகிறார்.
சமீபத்தில் பிரியங்கா, 2000ஆம் ஆண்டில் தான் உலக அழகி பட்டம் வென்ற நாளை தனது தாயாருடன் சேர்ந்து நினைவுகூர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்காவின் தாயார் மது சோப்ரா, பட்டம் வென்ற தனது மகளிடம் முதலில் முட்டாள்தனமான கேள்வியை கேட்டதாகக் கூறியுள்ளார்.
அதில், ‘’என் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. என்ன நடக்கப்போகிறது என தெரியவில்லை. அவளைக் கட்டித் தழுவ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவளை கட்டியணைத்தபோது, முதலில் உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது, உலக அழகி பட்டம் வென்றதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்று வாழ்த்துவதற்கு பதிலாக முட்டாள்தனமான ஒரு கேள்வியைக் கேட்டேன்’’ என்கிறார்.
உலக அழகி பட்டம் வென்றபோது நடந்த சில நகைச்சுவை நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்ட பிரியங்கா, அந்த வீடியோவில், ‘’18 வயது ஆன நான் உலக அழகிபட்டம் வென்றேன். எனது பெற்றோரிடம் வந்தபோது, எனது அம்மா முதலில் என்னிடம் கேட்டது, ‘பேப், உனது படிப்பு என்ன ஆகப்போகிறது?’ என்பதுதான்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி