முன்னாள் மத்திய அமைச்சர் திலிப் ராய்க்கு நிலக்கரி ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்தவர் திலிப் ராய். இவர் மீதுதான் 1999 ஆம் ஆண்டு ஜார்கண்டில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த ஊழல் வழக்கில் தற்போது தண்டனை கிடைத்துள்ளது.
ஜார்கண்ட் பிரம்மாதியா நிலக்கரி சுரங்கத்தை கேஸ்ட்ரால் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பேரில் கடந்த 2012 ஆம் ஆண்டு திலிப் ராய்க்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திலிப் ராய் நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட இரண்டு பேர், கேஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநருக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் இன்று தீர்ப்பளித்தார்.
முன்னாள் அமைச்சர் திலிப் ராய், அதிகாரிகள் பிரதீப் குமார் பானர்ஜி, நித்யானந்த் கெளதம், கேஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் மகேந்திர குமார் அகர்வாலா ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவாதாக அறிவித்தார். நிலக்கரி ஊழல் வழக்கில் தண்டனையளிக்கப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தகக்து.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி