விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் ராஜலட்சுமி ஃபையர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல் இன்றும் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடியிருக்கிறார்கள். ஆனால் வெடிவிபத்து ஏற்பட்ட அறையில் இருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் உடல்கருகி உயிரிழந்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. வெடிவிபத்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
உயிரிழந்தவர்களின் முழுமையான தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
Loading More post
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு