அமெரிக்காவில் 23 வயது கர்ப்பிணி பெண்ணை முன்னாள் காதலன் கொலை செய்து பிரிட்ஜில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 23 வயது செலினா ஆன் பிராட்லியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. இரண்டு குழந்தைகளுக்கு தாயான செலினா தற்போது மூன்றாவது குழந்தைக்கு விரைவில் தாயாகவிருக்கிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து காணாமல் போனதால் குடும்பத்தினர் புகார் அளித்து காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கள் கிழமை செலினாவின் முன்னாள் காதலனின் வீட்டில் தேடியபோது, செலினா கழுத்து மற்றும் முகத்தில் படுகாயங்களுடன் சமையலறையில் இருந்த பிரிட்ஜில் கொலை செய்யப்பட்டு பிணமாக வைக்கப்படிருந்தார்.
அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவரது முன்னாள் காதலன் வில்லியம் ஜேம்ஸை செவ்வாய் கிழமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுவரை செலினா கொலைக்கான காரணம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை