உலகமே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில், நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதுதான் நோயிலிருந்து தப்பிக்க சிறந்த வழி என அரசாங்கமும் மருத்துவர்களும் நம்மை எச்சரித்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு தினமும் கைகளை சுத்தமாக கழுவவேண்டும், மாஸ்க் அணியவேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை அரசாங்கமும் கொண்டுவந்துள்ளது.
தற்போது அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த மருத்துவ வைராலஜி பத்திரிகை, மவுத்வாஷ் மற்றும் வாய் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தினால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
இனி டெலிவரி ஊழியராக வேண்டுமானால் நன்னடத்தை சான்று கட்டாயம்..!
கொரோனா தொற்று ஏற்பட்டபிறகு மவுத் வாஷ் பயன்படுத்தினால் வாயிலிருக்கும் வைரஸுகள் அழிக்கப்படுவதாகவும், இதனால் தொற்று குறைவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் மவுத் வாஷ் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களானதால் அவர்கள் இந்த தொற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்கமுடியும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த ஆராய்ச்சியில் மவுத் வாஷ் உட்பட, பேபி ஷாம்பூ, பெராக்ஸைடு வாய்ப்புண் வாஷ்கள் என பலவற்றை சோதனை செய்துள்ளதாக ஆராய்ச்சியாளர் கிரேக் பேயர்ஸ் கூறியுள்ளார். இவற்றை பயன்படுத்தினால் வாய் வழியாக வைரஸ் தொற்று பரவுவதைக் குறைக்கமுடியும் என்கிறார் அவர். பல மவுத் வாஷ்கள் 30 நொடிகளில் 99.9 சதவீத வைரஸ் கிருமிகளை அழிப்பதாவும், மேலும் சில 30 நொடிகளில் 99.99 கிருமிகளை அழிப்பதாகவும் கூறியுள்ளார். எனவே மவுத் வாஷைப் பயன்படுத்தி தினமும் காலை மாலை வாய் கொப்பளிப்பதன்மூலம் கொரோனா பரவலிலிருந்து சற்று தப்பிக்க முடியும் என்கிறார் அவர்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!