TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் ஆயுள் காலம் வரை செல்லுபடியாகும் என தேசியக் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிய நடைமுறையை அமல்படுத்துவதற்கு முன் சட்ட ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதிமுறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் இச்சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மாற்றம் செய்ய அண்மையில் நடந்த தேசிய ஆசிரியர் கல்விக்குழும பொதுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதன் மூலம் வரும் நாட்களில் தேர்வெழுதி வெற்றி பெறுவோருக்கும், ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கும் வழங்கப்படும் சான்றிதழ் ஆயுள் காலம் வரை செல்லுபடியாகும். எனினும் இந்த புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன் சட்ட ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனவும் தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் தெரிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சுமார் 80,000 ஆசிரியர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கக்கோரும் நிலையில் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Loading More post
"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு!
முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்
பகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி