தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தாமதமாக தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் 30 ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்திமுடிக்கவேண்டும் என்றும் முதலாம் ஆண்டு வகுப்புகளை டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கலாம் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக, பொறியியல் படிப்புகளில் இன்னும் முதலாம் ஆண்டு வகுப்புகளும் தொடங்கப்படவில்லை. இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பை வெளியிட்டது.
ஐஐடிகள் மற்றும் என்ஐடிக்கள் உள்பட பொறியியல் படிப்புகளில் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொடர்பாக ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளை நடத்தலாம். மேலும் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி, சூழலுக்கேற்ப அட்டவணை மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி நெட் தேர்வு: அடுத்த மாதம் ஒத்திவைப்பு
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?