சேலத்தில் உயிரோடு இருந்த முதியவரை குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்து உயிரிழப்பதற்காக காத்திருந்த அவலம் நிகழ்ந்துள்ளது.
கந்தம்பட்டி பழைய ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த 78 வயதான பாலசுப்பிரமணியகுமார், சகோதரர் சரவணன் மற்றும் குடும்பத்தினருடன் வசிக்கிறார். திங்களன்று பாலசுப்பிரமணிய குமார் இறந்துவிட்டதாகக் கூறி, 70 வயதான சரவணன் குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியை வரவழைத்துள்ளார்.
பெட்டியை திரும்ப எடுத்துச் செல்வதற்காக வந்தவர்கள், அந்தப் பெட்டிக்குள் முதியவர் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோயினர். அவரது கைகள் கட்டப்பட்டிருந்ததோடு, கண்கள் திறந்திருந்தது. இதுபற்றி கேட்டபோது,இன்னும் சிறிது நேரத்தில் உயிர் போய் விடும் என்று சரவணன் கூறியுள்ளார்.
இந்த பதிலால் மேலும் அதிர்ச்சியடைந்த குளிர்பதனப்பெட்டிக்காரர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி கூறியுள்ளனர். அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து முதியவரை சிகிச்சைக்காக அனுப்பினர். தகவலின்பேரில் வந்த காவல்துறையினர், முதியவர் கையாளப்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ