தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் உள்ள குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி மனப்பாடப் பாடலை புதுமையான முறையில் காட்சிப்படுத்தியுள்ளார் தமிழாசிரியர் ச. ராஜன். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக அவர் பணியாற்றிவருகிறார்.
குலசேகர ஆழ்வாராக வேடமிட்டு பெருமாள் திருமொழியின் "வாளால் அறுத்துச் சுடினும்..." என்ற பாடலைப் பாடியிருக்கிறார் தமிழாசிரியர் ராஜன். இதுபற்றி அவரிடம் பேசும்போது, "பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் வீட்டில் இருக்கும்போது, மனப்பாடப் பாடல்களை அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதால் மாணவர்கள் மனத்தில் எளிதாகப் பதியும். இதுபோல பல ஆசிரியர்கள் செய்துவருகிறார்கள். பாடலில் வரும் கருத்துகள் அடிப்படையில் முழுமையான காணொலியாக தயாரிக்கும்போது மாணவர்களுக்குப் பயன்படுகிறது" என்று ஆர்வத்துடன் பேசுகிறார்.
தமிழாசிரியர் ராஜன்
கொரோனா காலத்தில் முதல் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் உள்ள மனப்பாடப் பாடல்களை இதுபோன்ற காணொலியாக மாற்றி தமிழ் முற்றம் என்ற யூ டியூப் சேனலில் மாணவர்களுக்குப் பயன்படும்வகையில் பதிவேற்றி வருகிறார் மதுரையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெரோம்.
"ஒரு பாடலை காட்சியாகப் பார்க்கும்போது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். மனப்பாடம் செய்யவேண்டிய வரிகளை எளிதாகப் புரிந்துகொள்வார்கள். இந்தக் காணொலிகள் மாணவர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழ் ஆர்வலர்களுக்கும் பயன்படும்" என்றார் ஜெரோம்.
பாடல் படப்பிடிப்பின்போது...
அடுத்து பாரதியாரின் ஓடி விளையாடு பாப்பா... என்ற பாடலை பாரதியாராக வேடமிட்டு காட்சியாக்கத் திட்டமிட்டு வருகிறார் தமிழாசிரியர் ராஜன். ஒவ்வொரு மனப்பாடப் பாடலையும் குறுநாடகமாக அரங்கேற்றி பதிவேற்றி வருகிறார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை; குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..
Loading More post
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை