மதுரை பாலமேடு அருகே மனைவியின் திருமணத்தை மீறிய உறவால், மகன்களை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தையை 2 மாதங்கள் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குமார் - உஷாராணி தம்பதியினர். இவர்களுக்கு கோப்பெருஞ்சோழன், சித்தார்த் என்ற இரு மகன்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து உஷாராணிக்கு வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கணவர் குமார் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் மனைவி உஷாராணி அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், தனது இரு மகன்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்தை குளிர்பானத்தில் கலந்து கொடுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.
இதில் சித்தார்த் மற்றும் கோப்பெருஞ்சோழன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தந்தை குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மருத்துவமனையிலிருந்து சில நாட்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்தநிலையில் மனைவி உஷாராணி கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் இரு மகன்களை கொலை செய்த வழக்கில் குமாரை வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'