மின் விநியோகத்தில்‌ கோளாறு: மின்சாரமின்றி தவிக்கும் மும்பை.!

மின் விநியோகத்தில்‌ கோளாறு: மின்சாரமின்றி தவிக்கும் மும்பை.!
மின் விநியோகத்தில்‌ கோளாறு: மின்சாரமின்றி தவிக்கும் மும்பை.!

மும்பையில் மின்விநியோகத்தில்‌ ஏற்பட்ட கோளாறு காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

கல்வா பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் மின் விநியோக தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பையில் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் ஜுகு, அந்தேரி, மிரா ரோடு, நேவி மும்‌பை, தானே, பான்வெல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரமின்றி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் மும்பைப் புறநகர் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும்‌ சிரமத்திற்கு ஆளாகினர்.

அதேநேரம் மருத்துவம‌னைகளில் ஜெனரேட்டர்களை பயன்படுத்தியதால் இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்விநியோகத் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்சாரம் தடைபட்டதாகவும், சிரமங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மும்பை மாநகராட்சி கூறியுள்ளது.

மின்சார தடை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மின் தடை குறித்து பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com