தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி, தனியாா் பள்ளிகளில் இலவசமாக ஏழை எளிய குழந்தைகள் சேர்க்கப்படுவர். அதில் எஞ்சியுள்ள 55 ஆயிரம் இடங்களுக்கு நாளை முதல் (அக்டோபர் 12) விண்ணப்பிக்கலாம் என தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவா்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
அதாவது, 8,608 தனியாா் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15,771 இடங்கள் உள்ளன. அதற்கு 86,318 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட மாணவர் சோ்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 12 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை இணையதளம் வழியாக பெற்றோர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 4ம் தேதி ஆரம்பமாகிறது மகளிர் டி20 கிரிக்கெட் தொடர்
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்