தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மீதமுள்ள காலியிடங்களுக்கு அக்டோபர் 12 ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதாவது, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் இலவசமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். முதல்கட்டமாக ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளிட்ட பிரிவினர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் குலுக்கலின்றி தேர்ந்தெடுக்கப்படும்.
பின்னர் மீதமுள்ள இடங்களுக்கு ஒரு கி.மீ. தொலைவிற்குள் வசிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளின் விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்தப்படும். தற்போது தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் எஞ்சியுள்ள இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தற்போது மீதமுள்ள இடங்கள் பற்றிய பட்டியலை, தகவல் பலகையில் அக்டோபர் 10 ஆம் தேதியன்று ஒட்ட வேண்டும். அடுத்து, குழந்தைகளின் பெற்றோர் இணையதளம் வழியாக அக்டோபர் 12 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பிறகு தகுதியான விண்ணப்பங்கள், தகுதியற்ற விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை, அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் நவம்பர் 11 ஆம் தேதி வெளியிட வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும் பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
சேர்க்கைக்குத் தகுதியான மாணவர்களின் பட்டியலை பள்ளித் தகவல் பலகையில் வெளியிடுவதோடு, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசவத்தின்போது ஒவ்வொரு 16 நொடிக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது: ஐநா கவலை
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?