சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, புவிவெப்பமயமாதல் காரணமாக பகல்களைவிட இரவுகள் அதிக வெப்பமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 34 ஆண்டுகால பருவநிலை தொடர்பான தகவல்களின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரிட்டனைச் சேர்ந்த எக்ஸ்டர் பல்கலைக்கழக அறிவியல் ஆய்வாளர்கள் 1983 முதல் 2017 வரை புவிவெப்பமயமாதல் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த சர்வதேச அளவிலான ஆய்வில் வெப்பநிலை, மேகமூட்டம், ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு பற்றிய பதிவுகளை மணிக்கணக்கில் ஆய்வு செய்துள்ளார்கள்.
இந்த ஆய்வு முடிவுகள் குளோபல் சேஞ்ச் பயாலஜி என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. ஆண்டு வெப்பநிலையில் 0.25 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவுக்கு பகலுக்கும் இரவுக்குமான வேறுபாடு இருப்பதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
பகல் நேரத்தில் அதிகரிக்கும் மேகமூட்டம் மேற்பரப்பை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. ஆனால் அதே மேகமூட்டம் இரவில் வெப்பத்தை உறிஞ்சி இரவுநேர வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
"புவிவெப்பமயமாதலின் சமச்சீரற்றத் தன்மை இயற்கையான உலகில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகிறது" என்று கூறுகிறார் எக்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் டேனியல் காக்ஸ்.
விமானத்தில் பிறந்த குழந்தை: வாழ்நாள் இலவச டிக்கெட் வழங்கிய இன்டிகோ நிறுவனம்!
Loading More post
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!
சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதா? மகாராஷ்டிரா அரசு கேள்வி!
74-வது 'மன் கி பாத்..' இன்று உரையாற்றும் பிரதமர் மோடி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி