கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியைச் சேர்ந்த இந்திய கடற்படை கேப்டன் மதுசூதன ரெட்டி. தன் குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த அவர், பாராமவுண்டிங் எனப்படும் சாகச விளையாட்டில் ஈடுபட்டபோது மயங்கி கீழே விழுந்தார். பின்னர், அரை மணி நேரத்தில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கார்வார் போலீசார் தெரிவித்தனர்.
பாராமவுண்டிங் சாகச விளையாட்டில் ஒரு சீட்டுடன் கூடிய மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். வீரரின் இருக்கைக்குப் பின்னால் உள்ள மோட்டார் உந்தித்தள்ள அது மேலே செல்லும். கடந்த வெள்ளியன்று 55 வயதான மதுசூதன் ரெட்டி கார்வாரில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் கடற்கரைக்குச் சென்றார்.
கொரோனா காரணமாக தடை செய்யப்பட்டிருந்த பாராமவுண்டிங், வெள்ளியன்றுதான் மீண்டும் தொடங்கப்பட்டது. அங்கு குடும்பத்தினருடன் வந்த மதுசூதன ரெட்டி, தன் நண்பருக்குச் சொந்தமான அந்த சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது கடலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பாராமவுண்டிங்கில் பறந்துகொண்டிருந்தபோது, மோட்டாரில் சிக்கல் ஏற்பட்டு கடலில் விழுந்தார்.
உடனடியாக மீனவர்களால் மீட்கப்பட்டபோது கடற்படை கேப்டன் உயிருடன் இருந்துள்ளார். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமான நிலையில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்புக்கு கடல்நீர் மற்றும் வெளியில் காணப்பட்ட வேறுபட்ட வெப்பநிலையே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Indian Navy Captain dies in paramounting mishap, his fall captured on camera @thenewsminute pic.twitter.com/OdyXOG4FEk
— Theja Ram (@thejaram92) October 3, 2020Advertisement
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்பாடு: புதிய விதிமுறைகள் என்னென்ன?
Loading More post
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
பெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?