கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கெய்லீ மெக்னானி “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் சிறப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மிகுந்த எச்சரிக்கையுடன், அதிபரின் மருத்துவர் மற்றும் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி வால்டர் ரீட் மருத்துவமனியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து அடுத்த சில நாட்களுக்கு பணியாற்றுவார்" என்று கூறினார்.
டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருக்கிறார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையின் மருத்துவர் சீன் பி. கான்லி, “ அதிபர் நல்ல உற்சாகமாக இருக்கிறார்" என்று கூறினார். 74 வயதான டிரம்ப் தனது வயது மற்றும் அதிக எடை காரணமாக மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறார்.
நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது தேர்தல் பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?