2017 ஆம் ஆண்டுக்கு பிறகு முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து 5 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையாகிறது.
இன்று ஒரே நாளில் முட்டையின் விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஒரு ரூபாய் 50 காசுகளுக்கு முட்டை விற்கப்பட்டதால், நாமக்கலில் கடந்த சில மாதங்களாகவே முட்டையின் உற்பத்தி குறைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது முட்டையின் தேவை அதிகரித்து வருவதாகவும், ஆனால் உற்பத்தி குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முட்டையின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 5 ரூபாய் 16 காசுகளுக்கு முட்டை விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு தற்போது தான் வரலாறு காணாத அளவுக்கு முட்டையின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!