கொரோனா பரவல் அதிகரிப்பதால் கேரளாவில் 5 நபர்களுக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து இன்று முதல் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்க ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு அக்டோபர் 2 ஆவது வாரத்தில் 15 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக கேரள சுகாதரத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு துரிதப்படுத்தியுள்ளது. இதுகுறித்த ஆலோசனையில் பொதுமுடக்கம் வேண்டாம் என்று அனைத்துக்கட்சிகளும் முடிவெடுத்த நிலையில் கொரோனா விதிகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தங்கக்கடத்தல், லைப்மிஷன் திட்ட முறைகேடுகளை கண்டித்து நடந்த போராட்டங்கள் நிறுத்தப்பட்டன.
தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப 144 தடை உத்தரவு பிறப்பிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் தலைநகர் திருவனந்தபுரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Loading More post
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வு; தேதி மாற்றம் பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் பதில்
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை