மகாராஷ்டிரா மாநிலம் புனே - சோலாபூர் சாலையில் ஒரு ரசாயன உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தலைநகரிலிருந்து சுமார் 80 கிமீ தூரத்தில் உள்ள தொழில்துறை மேம்பாட்டுக் கழகப் பகுதியில் அமைந்துள்ளது ஷிவ் சக்தி ஆக்ஸலேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம். ரசாயன கரைப்பான் உற்பத்தி நிறுவனமான இங்கு இரவு 1.30 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
செல்போன் டவர் மீது அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் !
உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்துவந்த வீரர்கள், 12 ஊழியர்கள், இரண்டு நாய்கள் மற்றும் அங்கிருந்த சில வாகனங்களையும் மீட்டுள்ளனர். ரசாயன கரைப்பான் நிறைத்து வைத்திருந்த கொள்கலன்கள் திடீரென வெடித்ததில் விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் மடமடவென தீ பரவியதாக தீயணைப்பு அதிகாரி சுதிர் கண்டேகர் தெரிவித்துள்ளார்.
அதிகாலை வரை போராடிய வீரர்கள், 8 முதல் 9 டேங்க் தண்ணீரைப் பயன்படுத்தி பற்றியெரிந்த தீயை ஒருவழியாக அணைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக ஒருவருக்குக்கூட காயம் ஏற்படவில்லை. அந்த இடத்தின் வெப்பத்தைக் குறைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சுதிர் தெரிவித்துள்ளார்.
Loading More post
சென்னை மற்றும் புறநகரில் கடுமையான பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!