இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்: வீரர்களிடம் கருத்து கேட்கும் பிசிசிஐ

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்: வீரர்களிடம் கருத்து கேட்கும் பிசிசிஐ
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்: வீரர்களிடம் கருத்து கேட்கும் பிசிசிஐ

புதிய பயிற்சியாளர் குறித்து வீரர்களின் கருத்தை அறிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயலதிகாரி ராகுல் ஜோரி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளார். 

இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் வரும் 10ல் நடைபெற உள்ள நிலையில், கேப்டன் விராத் கோலி உள்ளிட்ட வீரர்களை ராகுல் ஜோரி கிங்ஸ்டனில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, வீரேந்திர சேவாக், ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பயிற்சியாளருக்கான ரேஸில் ரவி சாஸ்திரி முந்துவதாகவே பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ரவி சாஸ்திரிக்கு கேப்டன் விராத் கோலி, கிரிக்கெட் ஆலோசனைக்குழு உறுப்பினர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோரின் ஆதரவும் இருக்கிறது. புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து கருத்து கேட்கப்பட்டால் மட்டுமே தங்களால் கருத்து கூற முடியும் என்று கேப்டன் விராத் கோலி கூறியிருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com