வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரின் குடும்பத்தினருக்கு கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரின் குடும்பத்தினருக்கு கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு
வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரின் குடும்பத்தினருக்கு கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு


வாடகைப்பணம் கேட்ட விவகாரம், கைலப்பு ஆன நிலையில், வீட்டு உரிமையாளரின் மருமகள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(குற்றவாளி)

சென்னை சூளைமேடு ராதாகிருஷ்ணன் நகர் 2-வது தெருவில் சந்திரமோகன் அவரது மகனான சதீஷ் மற்றும் மருமகள் சுகன்யா ஆகியோருடன் வசித்து வந்தார்.  சதீஷ் சுகன்யா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர், வீட்டின் மாடிக்குடியிருப்பை பெயிண்டர் நாராயணன் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை  நாராயணனிடம் வீட்டு வாடகைப்பணத்தைக் கேட்டுள்ளார் சதீஷ். ஊரடங்கு காரணமாக தொழில் இல்லாததால் தனது நிலைமையை நாராயணன் எடுத்துக்கூறியதாகத் தெரிகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் மூண்ட நிலையில் சத்தம் கேட்டு மாடிக்கு வந்த சுகன்யா மற்றும் சந்திர மோகன் சதீஷ்க்கு ஆதரவாக பேசியுள்ளனர்

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பு ஆன நிலையில் சதீஷ் மற்றும் அவரது தரப்பினர் நாராயணனை தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து சந்திர மோகன் மற்றும் அவரது மகன் மற்றும் மருமகளை சரமாரியாக தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த நபர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சுகன்யா சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தார். சதீஷ் மற்றும் சந்திரமோகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சூளைமேடு காவல்துறையினர் நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com