கீழடி 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணியை தமிழக தொல்லியல் துறை 40 லட்ச ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. செப்டம்பருடன் பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நான்கு இடங்களிலும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கீழடியில் 20 குழிகளும், அகரத்தில் 12 குழிகளும், மணலூரில் ஏழு குழிகளும், கொந்தகையில் ஒன்பது குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை குழந்தைகளின் எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், இணைப்பு பானைகள், பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானைகள், தரைதளம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. குழிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று முழுவதும் தண்ணீரை வெளியேற்றி குழிகளை காயவைக்கும் பணி நடைபெறும். இன்று இரவு மழை பெய்தால் நாளையும் பணிகள் நடைபெறுவது சிரமம். செப்டம்பருடன் பணிகள் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?