உத்திரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 4 குழந்தைகள் பிறந்துள்ளன.
உத்திரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் கவுரி பஜார் பகுதியை சேர்ந்த 26 வயது கர்ப்பிணி பெண் பிரசவ பரிசோதனைக்காக பிஆர்டி மருத்துவ கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று அவருக்கு மருத்துவமனையில் 4 குழந்தைகள் பிறந்தன. இதில் 3 குழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாக உள்ளனர். ஒரு குழந்தை மட்டும் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரசவம் முன்கூட்டியே இருந்தது மற்றும் நான்கு குழந்தைகளின் எடை 980 கிராம் முதல் 1.5 கிலோ வரை இருக்கும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை எனவும் பிரசவமும் மிகவும் சவாலானது எனவும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
இருப்பினும், கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக நுண்ணுயிரியல் துறைக்கு அனுப்பப்பட்ட நான்கு குழந்தைகளின் மாதிரிகள் மூலம் தாயும் புதிதாகப் பிறந்த மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர்.
Loading More post
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?