4 ஆண்டுகளுக்கு மேலாக மனைவியுடன் பிரிந்து வாழ்வதை தாங்க முடியாமல் தையல்காரர் மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருணாச்சல நகர் பகுதியில் வசிப்பவர் முருகன். தையல் கடை நடத்தி வரும் இவருக்கு, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயதில் பையனும் 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை முருகன், சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீட்டு கொண்டார்.
முருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் வருவதற்குள் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை