தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பி. ஆர்க் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, நாட்டா எனப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வை எழுதவேண்டும். இந்தத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பளிக்கும் வகையில் தமிழக அரசு திறனறிவு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
22 கட்டட அமைப்பியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் 1,520 இடங்கள் உள்ளன. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் www.tneaonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 8 ம் தேதி தொடங்கி செப்டம்பர் 20 ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதுவரை 2,600க்கும் அதிகமான மாணவர்கள் பி. ஆர்க் படிப்புக்கு விண்ணப்பம் செய்துள்ள நிலையில், டிப்ளமோ கட்டடவியல் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அவர்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் டிப்ளமோ மாணவர்களின் நலன்கருதி விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க ஆலோசனை நடத்திவருவதாக துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?