மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை ஆதரித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண் மசோதாக்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு அளித்ததோடு, அதனால் பாதிப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருப்பது அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில் மிகவும் மோசமானதாகும்.
வேளாண் மசோதாக்களை அதிமுக உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டுமே ஆதரிக்கிறது. ஆட்சியையும், பதவியையும் காத்துக்கொள்ளவே வேளாண் மசோதாவை ஆதரித்தேன் எனக் கூறி விவசாயிகளிடம் மன்னிப்புக் கேட்டிருக்கலாம். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் பேசியுள்ளார். மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என்பது நகைச்சுவை. தன்னையும், அமைச்சர்களையும் காத்துக் கொள்ளவே சட்டங்களை ஆதரித்ததாகக் கூறி விவசாயிகளிடம் முதலமைச்சர் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை