தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களில் உள்ள கல்லூரிகளில் முழுநேர முனைவர் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபற்றி அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜெயா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், "அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின்கீழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டுவந்த ரூ. 16 ஆயிரம் உதவித்தொகை ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அதேநேரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்பட்டுவந்த ரூ. 25 ஆயிரம் ரத்து செய்யப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய அறிவிப்பு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. தற்போதைய ஆராய்ச்சி மாணவர்களுக்கும், புதிதாக சேரும் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?