எச் 1 பி விசாவிற்கு தடைவிதித்த ட்ரம்பின் உத்தரவை நீக்கக்கோரிய இந்தியர்களின் வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமைப் பெறாமல் அங்கு தங்கி பணிபுரியும் பிற நாட்டினர்கள் ஹெச் 1 பி விசா மற்றும் எச் 4 விசாக்களைப் பெற்று தங்கி வருகின்றனர். இந்த விசாவை 60 நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும். ஆனால், கொரோனாவால் கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் எச் 1 பி விசாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடை செய்தார். ஏனென்றால், அமெரிக்கர்களுக்கே வேலை இல்லாமல் இருக்கும்போது மற்ற நாட்டினருக்கு எப்படி கொடுப்பது என்றும் கேட்டிருந்தார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ட்ரம்பின் இந்தக் கொள்கை ’வணிகங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும்’ என்று எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 169 இந்தியர்கள் அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில் எச் 1 பி விசாவை வழங்க மறுக்கும் ட்ரம்ப் உத்தரவுக்கு தடைக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தபோது ட்ரம்ப் உத்தரவுக்கு தடை போட நீதிமன்றம் மறுத்துவிட்டதால், வழக்குத் தொடர்ந்த இந்தியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி