துவரங்குறிச்சியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்றபோது தீயணைப்பு வீரரின் கையை கடித்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி காவலர் குடியிருப்புக்கு அருகே உள்ள சின்ன செட்டிக்குளத்தெருவில் வசிப்பவர் உமர். இவரது வீட்டின் பின்புறம் இருக்கும் அடர்ந்த புதர் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புநிலைய அலுவலர் மாதவன் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை வீரர்கள் கருவிகளை கொண்டு புதரில் இருந்த 10 நீள மலைப்பாம்பை பிடித்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் வீரர் நாகேந்திரன் வலது கையில் மலைப்பாம்பு கடித்துள்ளது. இதில் காயமடைந்த நாகேந்திரன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையம் திரும்பினார். பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பெரியமலை வனப்பகுதியில் விடப்பட்டது.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?