ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிக்கின்றன என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சூரிய பிரகாசம் மற்றும் வினோத் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரப் படங்களில் நடிக்கும் விராட் கோலி மற்றும் தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஆர் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது
இந்த விளையாட்டுகள் குறித்து விளம்பரப் படங்களில் நடிக்கும் விராட் கோலி மற்றும் தமன்னாவை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விராட் கோலி, தமன்னா ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. விளையாட்டுகளை ஆன்லைனில் நடத்தும் நிறுவனங்களை மட்டுமே எதிர் மனுதாரராக சேர்க்க முடியும் என தெரிவித்துள்ளது.
மேலும், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளின் உடல் நலம் மன நலத்தையும் சீரழிக்கின்றன என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?