கொரோனா அச்சம் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கலைவாணர் அரங்கம் குறித்து தெரிந்துக்கொள்வோம்
1952 ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவையாக திகழ்ந்த இந்த அரங்கம் 65 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த அரிய வாய்ப்பை பெறுகிறது.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் அதிகளவு இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 1952ஆம் ஆண்டு சட்டப்பேரவை அரங்கம் ஒன்று வாலாஜா சாலையில் கட்டப்பட்டது. 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இக்கட்டடத்தை அப்போதைய ஆளுநர் பிரகாசா 1952ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.
ஆனால் 1956 இல் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்ததால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால் சட்டப்பேரவை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டது. இதன்பின் மிகக் குறைந்த செலவில் திரைப்படங்களை காட்டும் திரையரங்காக இக்கட்டடம் மாற்றப்பட்டது.
1974இல் இக்கட்டடம் ஆயிரம் இருக்கைகள் கொண்ட பிரமாண்டமான கலையரங்கமாக மாற்றப்பட்டு நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகள், நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் என சென்னை மக்களை மகிழ்விக்கும் இடமாக கலைவாணர் அரங்கம் திகழ்ந்தது.
இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் அதிநவீன வசதிகளுடன் எழுப்பப்பட்டது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் ஒரு முறை சட்டப்பேரவை அரங்கம் என்ற பெரும் கவுரவத்தை இந்த கட்டடம் பெற்றுள்ளது
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’