மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகள் முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் யுபிஎஸ்சி இணையதளம் மூலம் இ - அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து அதன் அச்சுப்பிரதியை எடுத்துவரவேண்டும். இதனை தேர்வுமையத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்கவேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் எடுத்துவரவேண்டும்.
தேர்வு எழுதும் மாணவர்கள் கருப்பு பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே ஓஎம்ஆர் தாளில் பயன்படுத்தவேண்டும். சாதாரண கைக்கடிகாரங்களைப் பயன்படுத்தலாம். ஃமொபைல் போன்கள், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச், புளூ டூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தங்களுக்கான கிருமிநாசினி திரவத்தை தெளிவான பாட்டில்களில் கொண்டுவரவேண்டும்.
தேர்வுக்கூடத்திலும் வளாகத்திலும் சமூக இடைவெளி, தனிமனித சுகாதாரம் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என பல வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?