சென்னை கோயம்பேட்டில் அடுத்தடுத்து மூன்று கடையின் பூட்டை உடைத்து ரூ. 1,50,000 கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் வசிப்பவர் குமார். இவர் கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் லட்சுமி பவர் டூல்ஸ் என்ற பெயரில் கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று மர்ம நபர்கள் இவருடைய கடையின் பூட்டை உடைத்து கல்லாபெட்டியில் இருந்த ரூ.1,45,000 பணத்தை கொள்ளையடித்து விட்டு பக்கத்தில் உள்ள இண்டு கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 5,000 ஆயிரம் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து குமார் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து அங்கு பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சியில் கொள்ளையன் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் பழைய குற்றவாளிகளின் படத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்