விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அழுகிய நிலையில் முட்புதருக்குள் இருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்த பெண்மணி யார் என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியார் நூற்பாலைக்கு சொந்தமான வாகன காப்பகத்தின் பின்புறம் ஊழியர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியை சுற்றி தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியாளர்கள் வேலைக்கு சென்றபோது அதிகமான துர்நாற்றம் வீசி உள்ளது. நாற்றம் வந்த இடத்திற்கு அருகே சென்று பார்த்த போது, இறந்த நிலையில் பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது.
ஆலை நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் தெற்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. நீல நில சட்டையும், நீல நிறத்தில் பூ போட்ட சேலையும் அணிந்தவரின் முகம் சிதைந்து உடல் வீங்கிய நிலையில் சடலம் கிடந்தது. அப்பெண் இறந்து சுமார் 3 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலத்தின் அருகே ரூபாய் நோட்டுகளும் குருணை மருந்து பாட்டிலும் இருந்ததால் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து இந்த இடத்தில் வீசிவிட்டு சென்றார்களா என்று பல கோணத்தில் தெற்கு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி