15 ஆண்டுகளில் தற்போது இந்தியாவின் பணியமர்த்தல் உணர்வு மிகக் குறைவாக உள்ளது. வெறும் 3% நிறுவனங்கள் மட்டுமே அடுத்த மூன்று மாதங்களில் ஊழியர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளன என்று மனிதவளக் குழு வேலைவாய்ப்பு அவுட்லுக்கின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு இந்தியா முழுவதும் 813 நிறுவனங்களில் நடத்தப்பட்டது. ஏறக்குறைய 44% முதலாளிகள் அடுத்த ஒன்பது மாதங்களில்தான் கோவிட்-19 நெருக்கடிக்கு முந்தைய பணி நிலைமைக்குத் திரும்பலாம் என்று கூறியுள்ளனர். 42% முதலாளிகள் எப்போது பழைய நிலை திரும்பும் என தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளில் தற்போதுதான் இந்தியா, இத்தகைய பலவீனமான பணியமர்த்தல் உணர்வைக் காண்கிறது. 2020 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இந்திய முதலாளிகள் எச்சரிக்கையுடன் பணியமர்த்தல் திட்டங்களை தெரிவிக்கின்றனர்.
கணக்கெடுப்பின்படி, 7 சதவீத முதலாளிகள் சம்பளப்பட்டியலில் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள், 3 சதவீதம் பேர் குறையும் என்று கணித்துள்ளனர், 54 சதவீதம் பேர் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை.
நடுத்தர அளவிலான மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களை விடவும் சிறிய அளவிலான நிறுவனங்களில் வலுவான பணியமர்த்தல் வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் பணியமர்த்தல் வேகம் அதிகமாகவும் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளின் பணியமர்த்தல் விகிதம் குறைவாகவும் உள்ளது என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை