ஐபிஎல் போட்டியில் ஆண்ட்ரிவ் ரஸல் எந்த பவுலரின் பந்துவீச்சில் தடுமாறுவார் என முன்னள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கணித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் ஆண்ட்ரிவ் ரஸல். கடைசி சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்தாலும், பந்தை மைதானத்தின் நான்கு புறங்களிலும் பறக்கவிட்டு ரன்களை வாரிக்குவித்தார் ரஸல். இதனால் சாத்தியமில்லாத வெற்றிகள் கூட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு வசமாகியது.
கடந்த ஐபிஎல் தொடரில் மட்டும் 510 ரன்களை ரஸல் விளாசினார். அவரது ஸ்டிரைக் ரேட் 204.81 ஆக இருந்தது. இதுதவிர அவர் 11 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார். இதனால் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ரஸல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஸல்க்கு ஐபிஎல் தொடரில் சவலாக 3 பவுலர்கள் இருப்பார்கள் என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ராவின் பந்து ரஸலை தடுமாறச் செய்யும் என காம்பீர் கணித்துள்ளார். அதுமட்டுமின்றி ரஸலை இந்த முறை ஐபிஎல் போட்டியில் 5 அல்லது 6வது இடத்தில் களமிறக்கக்கூடாது எனவும், அவரை 4வது இடத்தில் களமிறக்குவதே சரியாக இருக்கும் என்றும் காம்பீர் தெரிவித்துள்ளார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை