குடும்பத்தைவிட கட்சியின் நலனே முக்கியம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சத்யதேவ் திரிபாதி, முன்னாள் எம்.பி. சந்தோஷ் சிங் என கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 9 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை என்றும், மூத்த தலைவர்கள் அவமதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
குடும்பத்தைவிட கட்சியின் நலனே முக்கியம் என செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள், கட்சியின் வளர்ச்சிக்காக அதன் ஜனநாயக மரபுகளை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். கட்சிக்கு பொருத்தமான தலைமை தேவை என கடந்த மாதம் சோனியா காந்திக்கு 23 தலைவர்கள் எழுதிய கடிதம் விவாதங்களுக்கு வித்திட்ட நிலையில், தற்போதைய கடிதமும் பிரச்னையை உண்டாக்கும் என கூறப்படுகிறது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?