காற்றை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட மாஸ்கை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்தது
உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. வெளியே செல்லும்போது நம்மை பாதுகாக்க மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. நம் வாழ்க்கை முறையில் மாஸ்க் என்பதும் கட்டாயமாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் விதவிதமான வித்தியாசமான மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எல்இடி மாஸ்குகள், தங்க மாஸ்க், வைர மாஸ்க் என பல மாஸ்குகள் கவனத்தை பெறுவதற்காகவே வெளியாகியுள்ளன.
ஆனால் அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப உதவியுடன் தற்போது ஒரு மாஸ்க் தயாராகியுள்ளது. பிரபல நிறுவனமான எல்ஜி இந்த காற்றை சுத்தப்படுத்தும் மாஸ்கை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பெர்லினில் வீட்டு தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தக் கூடிய வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கண்காட்சியும் நடத்தப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படவில்லை.
இந்தக் கண்காட்சியில் காற்றை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட மாஸ்கை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த மாஸ்கில் H13 HEPA காற்று வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்பம் தான் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏர் புயூரிபயர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அணிந்திருப்பவரின் மூச்சு வேகத்துக்கு ஏற்ப செயல்படவும் இந்த மாஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தாங்கக் கூடிய பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டாலும் இந்த மாஸ்க் விலை மற்றும் சந்தைகளில் எப்போது கிடைக்கும் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
டெல்லியில் இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!