கொடைரோடு அருகே தனியார் பள்ளிகளுக்கு இணையாக வாட்ஸ்அப் மூலம் ஆடிப்பாடி நடனமாடி கல்வி புகட்டும் ஆசிரியர்களின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக 100 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், அப்பள்ளி சிறந்தப் பள்ளிக்கான விருதைப் பெற்றது. இப்பள்ளியில் ஆங்கிலக்கல்வியும் தொடங்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், தனியார் பகுதிகளில் இருந்து விலகி இப்பள்ளியில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கிலும் மாணவர்களுக்கான கல்வியை முறையாக கொண்டு செல்ல நினைத்த, பள்ளி தலைமை ஆசிரியரான ஆர்தர் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை ஏற்பாடு செய்தார். ஆனால் வறுமை கோட்டில் கீழ் உள்ள மாணவர்களுக்கு இம்முறையிலான கல்வி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் அண்டை வீட்டாரின் செல்போன் எண்களை சேகரித்த ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பிற்கு தனித்தனியான வாட்ஸ் ஆப் குழுக்களை அமைத்தனர்.
நேரடியாக ஆன்லைன் மூலம் பாடம் எடுக்க முடியாததால், ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் ஆடிப்பாடி நடனமாடி பாடங்களை நடத்தி அதை வீடியோவாகப் பதிவு செய்து மாணவர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த வீடியோக்களுக்கான சந்தேகங்கள் அடுத்த நாள் வெளியிடப்படும் வீடியோவில் கலந்துரையாடப்படுகிறது. ஆசிரியர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?