கொரோனா வைரஸ் அதிகமாக பரவக்கூடிய நாடுகளில் பெரும்கூட்டம் சேரக்கூடிய நிகழ்வுகளைத் தடுக்கவேண்டும். கொரோனா வைரஸை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு முன்பு ஊரடங்கைத் தளர்வுபடுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசுஸ், கட்டுபாடுகளால் பலர் சோர்வடைந்து வருவதாகவும், எட்டு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புவதாகவும் கூறுகிறார். அதேசமயம் பொருளாதாரம் மற்றும் சமூக நிலையை சரிசெய்யும் முயற்சிக்கு உலக சுகாதார அமைப்பு முழு ஒத்துழைப்புத் தருவதாக அவர் ஒரு செய்தி மாநாட்டில் கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதையும், மக்கள் பணிகளுக்கு திரும்புவதையும், அதேநேரத்தில் பாதுகாப்பாக இருப்பதையும் தாங்கள் காணவிரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொற்றுநோய் மறைந்துவிட்டதாக எந்த நாடும் கூறிவிடமுடியாது. இந்த வைரஸ் எளிதில் பரவுகிறது. இந்த நேரத்தில் கட்டுப்பாடுகளை தளர்வுபடுத்துவது பேரழிவுக்கான வழியைத் திறப்பது போன்றது. அரங்கங்கள், இரவு விடுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேருவதால் வைரஸ் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என்று டெட்ராஸ் கூறியுள்ளார்.
Loading More post
”ரூ12,400 கோடிக்கு புதிய திட்டங்கள்” - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி புகழாரம்!
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
ஓடிடி படங்களை 13+ ,16+, அடல்ட் என வகைப்படுத்த வேண்டும்: மத்திய அரசின் புதிய விதிமுறைகள்
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?