பல்கலைக்கழகங்களில் இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15க்கு பிறகு நடக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணாக்கர்களின் இறுதி பருவத்தேர்வு செப்டம்பர் 15 க்கு பிறகு நடத்தப்பட உள்ளது.
இதற்கான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும். மாணாக்கர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக தயார் செய்யப்பட்டு வருகிறது. பி.ஆர்க் எனப்படும் கட்டிட அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவினை மேற்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்