ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வழியில் நடைபெற்றது. அப்போது, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் குறைந்ததால் மாநிலங்கள் சந்தித்துள்ள இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு அறிவித்த 2 புதிய சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்தது.
அதன்படி ரிசா்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு அமல்படுத்தும் முதலாவது திட்டத்தின் கீழ் மாநிலங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ. 97,000 கோடி வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவது திட்டப்படி, மாநிலங்கள் சந்திக்கவுள்ள சரக்கு-சேவை வரி வருவாய் பற்றாக்குறையான ரூ. 2.35 லட்சம் கோடியையும் ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த கடன் திட்டங்களுக்கு கேரளம், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களும், புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை முழுவதுமான வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading More post
இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும்- சென்னைவாசிகளுக்கு வானிலை மையம் அறிவுறுத்தல்
”ஆக்ஸிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியையும் எடுக்கத் தயார்” - மத்திய அரசு
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மு.க.ஸ்டாலின்!
அசாம் வரும் அனைவருக்கும் 7 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என அறிவிப்பு
இந்தியா: 24 மணி நேரத்தில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ