சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கல்யாணி பிரியதர்சன். தற்போது இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் பிரியதர்சன் - நடிகை லிஸியின் மகளான கல்யாணி, சமூக வலைதளத்தில் ஓணம் விழாவை முன்னிட்டு அழகிய சேலை அணிந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்தப் படத்தில் பூக்கோலமிட்டு, கொரோனா நோயாளிகளுக்கு தன்னலமின்றி சேவை செய்து உயிர்களைக் காத்த செவிலியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுக்குப் பிறகு நன்றியுணர்வுடன் வெளியே வந்திருக்கிறார்.
"மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதையும், எங்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவதையும் பற்றி நான் எப்போதும் ஓணம் வழியாக கற்றுக்கொண்டேன். இந்த ஆண்டில், இடைவிடாத தன்னலமற்ற பணியின் மூலம் எண்ணற்ற கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றி வீட்டுக்கு நலமுடன் அனுப்பிய செவிலியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கல்யாணி பிரியதர்சன் நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், "கொரோனா காலத்தில் பணியாற்றிய நம்முடைய செவிலியர்களின் அன்பு, அக்கறை, ஆதரவுக்கு ஓணம் பூக்கோலத்தை அர்ப்பணிக்கிறேன். நம்முடைய நன்றியைக் காட்டுவதில் நீங்களும் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று கல்யாணி பிரியதர்சன், தன் அன்பின் வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
Loading More post
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?