மத்திய அரசின் தேசிய வருவாய்வழி திறன் தேர்வில் (என்எம்எம்எஸ்) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை செப்டம்பர் 15ம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் அனுப்பியுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, கல்வி உதவித்தொகை பெற தகுதிபெற்ற மாணவ மாணவிகளின் பெயர்ப்பட்டியல் கடந்த ஜூலை 20ம் தேதியன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள நடப்பு கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல் என்ற இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்குமாறும், வெறும் பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளில் பயிலும், முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பதிவேற்றும் பணியை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு, தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?